பக்கம்:மனோன்மணீயம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் நான்காம் களம் இடம் : சுந்தரமுனிவர் ஆசிரமம். காலம் : வைகறை (நிஷ்டாபரர், கருணாகரர் இருவரும் அளவளாவி இருக்க.) (நேரிசை ஆசிரியப்பா) கிஷ்டாபரர் : ஏதி ஃதுமக்குமோ இத்தனை மயக்கம்! வே தவே தாந்தம் ஓதி நீர் தெளிந்தும் இரவெலாம் இப்படி இமையிமை யாதே பரித பித் திருந்தீர்!! கருணா கரரே ! 5. பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது! போரிலை ஆயினென்? யாருறார் மரணம்? எத்தினம் உலகில் எமன் வரா நற்றினம்? இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்? ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில் 10. எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள் உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்? சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும். குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி ! பல குழி நிறைந்த பசையறு தன்முகத்து 15. அல்"குடி யிருக்க அருளிலாக் குண்டுகண் தீயெழத் திரித்துப் பேழ்வாய் திறந்து கருக்கொளும் சினை ஈ வெருக்கொளக் கெளவி விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின் முன்னிரு கையில் வெந்துறக் கிடத்தி 20. மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப் பறித்திழுத் திடுத்துக் கறிக்கமேற் றவ்ஈ நொந்து நொந் தந்தோ! சிந்தனை மயங்கி எய்யா தையோ! என்றழு குரலிங்கு யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்? 25. கைகால் மிகில் நம் மெய்வே றாமோ? 1. வருந்தியிருந்தீர் 2. அவலட்சணம் 3. இருட்டு 4. பிளந்தவாப் 5. இழுத்துக் கடிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/125&oldid=856120" இலிருந்து மீள்விக்கப்பட்டது