பக்கம்:மனோன்மணீயம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மனோன்மணியம் குடில : 15. ஏவலின் படியாம் எண்ணா யிரவர் ஆதியர் காவலா ஆக்கியே அகன்றோம். ஜீவ T ஏதிது பின் னி வர் இருந்துமற் றிங்ங்னம்? _ இருந்திடில் இங்ங் ைம் பொருந்துமோ இறைவ! ஜீவ : செவ்விது! செய்ததென்! குடில : குடில : எவ்விதம் செப்புகேன்? 20. நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம் போரிடைக் கண்டனை நாரணர் தம்மை . ஜீவ : மெய்ம்மை! கண்டனம் விட்டதென் காவல்? குடில ; ஐய! யான் அறிகில & அவரிலும் நமக்கு மெய்ம்மை யர் யாவர்? வேலியே தின்னில் 25. தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். ஜீவ துரோகம்! துரோகம்! குடில : துரோகமற் றன்று விரோதம்! அடியேன் மேலுள விரோதம்! திருவடி தனக்கவர் கருதலர் துரோகம். ஜீவ : கெடுபயல் துரோகம்! விடுகிலன் சிறிதில். குடில : 30. மடையன் ! ஐயோ! மடையன்! சுவாe! எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது விருப்பம்மற் றவர்க்கன் வெகுமதி ஆயின், திருத்தமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில் 35. அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும். . அத்தனை அன்புநீ வைத்துளை! ஜீவ : (அழுது) ஆ1 ஆ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/166&oldid=856208" இலிருந்து மீள்விக்கப்பட்டது