பக்கம்:மனோன்மணீயம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மனோன்மணியம் தெரிவித்து அவனது அபிப்பிராயம் உசாவுவானாயினன். அதற்கு அப் பாதகன் இதுவே தன் மனக்கோள் நிறைவேற்: றற்குரிய காலமெனத் துணிைந்துகொண்டு மனோன்மணியை. இடம் பெயர்ப்பது தற்கால நிலைமைக்கு எவ்விஷயத்திலும் உத்தம மெனவும், ஆயினும் மணவினை முடியா முன்னம் அனுப்புதலால், கன்னியாகிய அவளுக்குப் பழிப்புரைக் கிட மாவதேயல்லால் அரசனுக்குச் சற்றும் சித்த சமாதானத். திற்கிடமில்லை யெனவும் அவன் நெஞ்சில் சஞ்சலம் விளைச வித்து, ஜீவகன் தானாகவே பலதேவனுக்கு மனோன் மணியை அன்றிரவே கல்யாணம் செய்துகொடுத்து முனிவர். ஆச்சிரமத்திற்கு மகளையும் மருமகனையும் சேர்த்து அனுப் புவதாகத் துணியும்படி தூண்டிவிட்டுத் தான் நெடுங்கால மாகக் கொண்டிருந்த அபிலாஷத்தைப் பூர்த்திப் படுத்திக் கொண்டான். so h ஆயினும் அவ்வளவோடு நில்லாமல், தன்னையறியாமல் முனிவர் வகுத்த கள்ள வழியைக் கண்டறிய வேண்டு. மென்று விருப்புற்று, அது அவர் வந்த அன்றே தமக்காகப். பெற்றுக்கொண்ட அறைக்குச் சம்பந்தப்பட்டிருப்பதே. இயல்பென ஊகித்து, அவ்வறையில் சென்று நோக்கி அச். சுருங்கையைக் கண்டுபிடித்து அவ்வழியே போய் வெளி யேறிப் பார்க்குங்கால், சத்துரு பாசறை அருகே தோன் றிற்று. அன்று பகலில் தன் மகனுக்குச் சண்டையில்: நேரிட்ட மோசடிபோலத் தனக்கு இனி வரக்கிடக்கும். போரில் உட்பகையாலோ வெளிப் பகையாலோ யாதேனும். அபாயம் நேரிட்டுவிடலாமென்ற பயத்தாலும் மனோன் மணி விவாகம் எப்படியும் அன்றிரவே நடந்தேறுமென்ற, துணிவாலும், நடந்தேறில் ஜீவகனது பிரிதியால் சிந்திக்கத். தக்கது வேறொன்றுமில்லை யென்ற இறுதியாலும், கோட் டைக்குத் திரும்ப வேண்டுமென்ற எண்ணம் விடுபட, தான் வருந்திக் கண்டுபிடித்த கற்படையைச் சேரனுக்குக் காட்டி அவ்வழியே அவனை அழைத்துச் சென்று. யாதொரு உயிர்ச் சேதத்திற்கு மி ட மி ல் லா ம ல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/20&oldid=856282" இலிருந்து மீள்விக்கப்பட்டது