பக்கம்:மனோன்மணீயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 193 பாண்டியனையும் அவன் கோட்டையினையும் சுலபமாகப் பகைவன் கையில் ஒப்புவித்து விட்டால், ஒரு குடம் ஜலத். நிற்கும் ஒரு பூமாலைக்குமாகச் சமரை நிறுத்தித் தன்னுாருக் குச் சிங்காதனம் சேர்க்காதொழிவனோ என்ற பேராசை பிடர் பிடித்துந்தவும் ஊழ்வலி யொத்து நிற்கவும் செய்த தினால் அத்துரோகியாகிய குடிலன் மெள்ள மெள்ளப் பாசறை நோக்கிப் போகவே கனாவில் மனோன்மணியினது. உருவங்கண்டு காமுற்ற நாள் முதலாக யாதொன்றிலும் மணஞ் செல்லாதவனாய் இரவெல்லாம் நித்திரை யற்றுத் தனியே திரிந்து வருந்தும் புருடோத்தமனை நடுவழியிற். சந்தித்துக் கொண்டான். அதுவும் தனது பாக்கியக் குறி யாகவே மதித்து மகிழ்ந்த குடிலன், எதிர்ப்பட்ட சேர னிடம் தனது துரோக சிந்தனையை வெளிப்படுத்த, தன்ன பங்கருதாச் சதுரனாகிய புருடோத்தமன் தன் சேவகரைக் கூவிக் குடிலன் காலிலும் கையிலும் விலங்கிடுவித்து, 'வீரமே உயிராகவுடைய வஞ்சி வேந்தருக்கு வெற்றி யன்று விருப்பு, இவ்வித இராஜ துரோகிகளைக் காட்டிக் கொடுத்து, மாற்றலராகிய மன்னவரையும் இரட்சித்துப் பின்பு வேண்டுமெற் பொருது தமது வீரம் நாட்டலேயாம்” என அவனுக்கு விடைகூறி, அவன் கூறிய சுருங்கை வழியே ஜீவகன் சபைக்கு வழிகாட்டி வரும்படி கட்டளை யிட்டான். இம் மொழி கேட்ட பாவி இடியொலி கேட்ட பாம்புபோலத் திடுக்கிட்டுத் திகைத்து நின்றான். ஆயினும் தானிட்ட கட்டளை மீறில் சித்ரவதையே சிஷையாமென்று. சேரன் சினந்து கூற, அதற்கு அஞ்சி அவ்வாறே கற்படைக்கு, வழிகாட்டி நடப்பானாயினன். - இப்பால் ஜீவகன் தன் மகளைப் பலதேவனுக்கு மண ஞ், செய்வித்து இருவரையும் முனிவர் ஆச்சிரமம் அனுப்புவதே. தகுதியெனத் தெளிந்தவாறே அச் செய்தியை மனோன் மணிக் கறிவிக்க அது அவன் செவிக்குக் காய்ச்சின நாரா சம்போலிருந்ததாயினும் தன் பிதாவுக்கு நேர்ந்த ஆபத்துக் ாலத்தை நன்குணர்ந்து அவனுக்கேற்றபடி நடந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/21&oldid=856304" இலிருந்து மீள்விக்கப்பட்டது