பக்கம்:மனோன்மணீயம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 23 ஏறக்குறைய வாசக நடைக்குச் சமமான அகவற் பாவால் இந் நாடகம் பெரும்பாலும் ஆக்கப்பட்டிருக்கிற தினால் ஒருவர் மொழியாக வரும் ஒருவரியில் அகவல் அடி முடியாவிடங்களில் அடுத்த வரியில் வரும் சீரோடு சேர்த்து ஆசிரிய அளவடியாக்கி முடித்துக் கொள்க. பல்வேறு தொழில்களிடையிலும் பினரி கவலையாதிகள் நடுவிலும் ஆங்காங்கு அகப்பட்ட அவகாசங்களிற் செய்யப் பட்டமையால் இந் நாடகத்துட் பல பாகங்கள் என் சிற்றறி விற்கே திருப்தி தருவன அல்ல. ஆயினம் கல்வி கேள்விகளிற் சிறந்த கனவான்கள் இக்கூறிய குறைவுகளைப் பாராட்டாது என்னை இம்முயற்சிக்குத் துரண்டி விட்ட நன்னோக்கத் தையே கருதி இந்நவீன நாடகத்தை அநாதரவு செய்யாது கடைக்களிைத்து அருள்புரியப் பலமுறை . பிரார்த்திக் கின்றேன். ■ - பொறியின்மை யார்க்கும் பழியன் று) அறிவறிந் தாள் வினை யின்மை பழி. குருசுந்தர சரணாலயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/25&oldid=856391" இலிருந்து மீள்விக்கப்பட்டது