பக்கம்:மனோன்மணீயம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மனோன் மணியம் 55. தோடம்!!-சுடு! சுடு: தீது நன்றென ஒதுவ வெல்லாம் அறியார் கரையும் வெறுமொழி யலவோ? பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி என்பது போலாம்; 60. மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க் கன்னங் கிடைக்கவும் அங்ங்ணம் மறைந்து மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய்;. அதனால் நமக்கென்? அப்படி நினைக்கில் இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்? 65. பார்க்குதும் ஒருகை சுந்தரன் யந்திரங் காக்கும் வகையுங் காண்போம்; சுவான2 சக்கரங் குக்கலைத் தடுத்திடும் வகையே யந்திரத் தந்திரம் இருப்ப்தென் றறியான். பித்தன் மெத்தவும் நமக்கினி இதுவே 70. உத்தம உபாய்ம் ஒகோ! சேவக் சித்தம் மெத்தக் களித்தோம் இந்த மனவுரை கேட்டென மன்னன் துணியப் பாவனை பண்ணுவோம்! ஏ? ஏ! சேவக! (சேவகன் எழுந்து வர} இன்று நாம் உற்ற இவ் வின்பம் போல 75. என்றும் பெற்றில்ம். இணையறு மாலை இந்தா! தந்தோம். இயம்பாய்: வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே (l). (நேரிசை ஆசிரியப்பா) சேவகன் : வாழ்க! வள்ளால்! நின் உதா ரம்' போல் ஏழுல கெவற்றிலும் உண்டோ? 80. வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே. குடில : o நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் (தனி மொழி) (சேவகன் போக) மதியிலி! என்னே மனிதர் மடமை!. இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ங்னம் தருமந் தானம் என்றுல கறியுங் 1. குற்றம் 2. நாய் 3. நாய் 4. அன்பு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/64&oldid=856799" இலிருந்து மீள்விக்கப்பட்டது