பக்கம்:மனோன்மணீயம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் முதற் களம் இடம் : அரண்மனை காலம் : வைகறை (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன் : குடிலன் 10. 15. 20. சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே! நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; - என்றுங் குழந்தை யன்றே: மன்றல் விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே. யாம் இனித் தாமதமின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்: வருமுன் கருதும் மந்திர வமைச்சே! இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாய்ப் பலமுறை நினைந்த துண்டிப் பரிசே: நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம்" நோக்கி யிருந்தே னன்றிச் சற்றும் மறந்தே னன்று தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோ இனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டரும் ஆண்டகை யென்றும், ஞானம் மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே துரதுவ ரேவின், மங்கையை 1. சேரன் 2. தன்மை 3. சமயம் (காலம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/66&oldid=856803" இலிருந்து மீள்விக்கப்பட்டது