பக்கம்:மனோன்மணீயம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1510. 320. 325. 330. 1. இரண்டாம் அங்கம் : முதற் களம் o 75 காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து பாரா ராளும் பாரென் படாவே? யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் மறந்து வன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் == தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே, சித்திரப் பார்வை யழுந்தார்க்' கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய்? இனியான் எப்படிச் செப்புவன்? நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்வதாச் செப்பிய செய்தியும் ஒரில் யாதோ பெரிய உறுகண் நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும்; என்னே யொருவன் வல்லமை! இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே... (17) (நாராயணன் போக) இரண்டாம் அங்கம் : முதல் களம் முற்றிற்று ஒவியத்துறை உணர்ச்சியற்றவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/77&oldid=856826" இலிருந்து மீள்விக்கப்பட்டது