பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மன்னிக்கத் தெரியாதவர் காட்டி, படத்தில் வரும் எதிரிகளை ஏமாற்றி, படம் பார்க் கிறவர்களேச் சிரிக்கச் சிரிக்க அடித்தான். சிரத்தையோடு கதை உருவாக்கி, சிரமத்தோடு உழைத்து, பலரது ஒத் துழைப்பையும் பெற்று, எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய அழ கான கலைச் சித்திரத்தை அவன் தயாரித்துக் காட்டினன். எனவே, அவனுக்கும் அவளுேடு உழைத்தவர்களுக்கும் நல்ல வெற்றி, பணமும் புகழும் தாராளமாக வந்து குவிந்தன. ஐம்பதாவது நாள். நூருவது நாள். . இருபத் தைந்தாவது வாரம் என்று வெற்றிவிழா ஊர்தோறும் கொண்டாடப்பட்டது. விழா நிகழும் ஊருக்கெல்லாம் மாதவனும், குமாரி சம்பாவும் விஜயம் செய்தார்கள். ஆரவாரமான வரவேற்பு பெற்ருர்கள். மாதவன் மகோன்னதமான இரண்டாவது படம்’ தயாரிப்பதில் ஈடுபட்டான். இடைக்காலத்தில் ஜோரான பங்களா ஒன்றும் கட்டி முடித்தான். அதில் சகல வசதிகளும் திரம்பியிருந்தன. அழகு அம்சங்களும் கலைநயத்துடன் சேர்க்கப்பட்டிருந்தன. வாழ்வது என்ருல் இவ்வாறு வாழ்க்கை நடத்துவது அல்லவா வாழ்வு!’ என்று அவன் எண்ணி எண்ணி மகிழ்ந்தான். சம்பாவுக்குப் பெருமை வாவது பெருமை! அவளும் அந்த வீட்டிலேயே வசித்தாள். ராணி மாதிரி வாழ்ந்தாள் அவள். ராஜா மாதிரி வாழவேண்டும்’ என்று ஆசைப்பட்டான் மாதவன். ராஜா மாதிரி என்ன? ராஜாவாகவே வாழ லாம். இக்காலத்தில் சினிமா நட்சத்திரங்கள்தான் அப்படி வாழ முடியும். நாம் துணிந்து வழிகாட்டலாமே!’ என்று தூண்டியது அவன் மனம், - எண்ணியதை எண்ணியபடி செய்து முடிக்கும் வசதிகள் தான் அவனிடம் இருந்தனவே! ஆகையால் அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் செயல்புரிந்தான் அவன். புராதன ரோம் நாட்டின் பிரமுகர்கள் அணிந்தது போன்ற அங்கியும் அதன்மீது துவண்டு தொங்கிக் கிடக்கும் ச்டோகாவும் தயாரித்துக்கொண்டான் மாதவன். அங்