பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

114

உடனே அருகிலிருந்த ராமன் சட்டென்று காந்திஜி படத்தின் முன்னால் வந்து நின்று கொண்டு, இந்த நிமிஷத்திலிருந்து நானும் குடிப்பதை விட்டு விட்டேன். காந்திஜி மீது ஆணை. ஏனெனில் அவரை விட ஒரு மகாத்மா இல்லை என்று ஒரு வீரனைப் போல் கூறிவிட்டு தன் மனைவியின் அருகில் போய் நின்று கொண்

டான். --

அவ்வளவுதான் - அடுத்த சில நிமிஷங்களில் பெரிய சலசலப்பு மூண்டது. அதன் பின் கூடி யிருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் பல வேசத்தின் அருகிலும், காந்திஜியின் முன்னிலும் சத்தியமாக பொழிந்த வண்ணமிருந்தனர்.

பலவேசம் . பிள்ளைக்கு புல்லாரித்தது. அவரது மகிழ்ச்சி வரம்பை மீறி நின்றது. உணர்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் தடுமாறின. * அன்பார்ந்த சகோதரர்களே!’’

இன்று ஒரு மறக்க முடியாத நாள் ஒவ்வொரு வருஷமும் பொங்கலன்று இந்த வீட்டில் நமது பண்ணையாட்கள் எல்லோரும் கூடுகி றாம். பரிசு கொடுக்கிறோம். ஆனால் இந்த ருஷப்