உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள்

97

பந்தாடு மாடேதன் படைநெடுங்கண் ஆடப்

பணைமென் தோள் நின்றாடப் பந்தாடுகின்றான்.

பெண்மணிகள் சிலர், பாண்டிய மன்னனைப் புகழ்ந்து பாடிக் கொண்டே பந்து ஆடியதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் சந்தமொடு பாடும் செந்தமிழ்க் கவிதைகள் சிந்தையைக் கவர்வனவாகும்.

பொன்னிலங்கு பூங்கொடிப் பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பஆர்ப்ப எங்கணும் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே.

பின்னும்முன்னும் எங்கணும் பெயர்ந்துவந் தெழுந்துலாய் மின்னுமின் இளங்கொடி வியனிலத் திழிந்தெனத் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே.

D

துன்னிவந்து கைத்தலத் திருந்ததில்லை நீள்நிலம் தன்னினின்று அந்தரத் தெழுந்ததில்லை தானெனத் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்று பந்தடித்துமே தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே’

அக்காலத்து மகளிர், இக்காலத்துப் பெண்மணிகளைப் போன்று பந்தாடினார்கள் என்றால், இப்போது ஆடப்படுகிற பேட்மின்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை அவர்கள் விளையாடினார்கள் என்பது அன்று. பழையகாலத்துப் பெண்மணிகள் ஆடிய பந்தாட்டம் வேறு விதமாக இருந்தது. அவர்கள் ஆடிய பந்துகள் நெட்டி, மயில் இறகு, கம்பளி மயிர் முதலிய இலேசான பொருள்களால் செய்யப்பட்டு, வெண்மை நிறமாகவும், கருமை நிறமாகவும், செம்மை நிறமாகவும் அமைந்து காண்பதற்கு அழகாக இருந்தன. ஒரே சமயத்தில் ஏழு பந்துகளை எறிந்து விளையாடினார்கள் என்று தெரிகிறது.

திருத்தக்கதேவர் தாம் இயற்றிய சீவக சிந்தாமணிக் காவியத்தில், விமலையார் இலம்பகத்தில் விமலை என்னும் பெண்மணி பந்தாடியதைக் கூறுகிறார்.

“அங்கையந் தலத்தகத்த ஐந்துபந் தமர்ந்தவை மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்