மறைந்துபோன தமிழ் நூல்கள்
தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல தரிதே மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயிற் செறிதல் உவத்தல் காய்தலொ டிலாதுபல் வகையுயிர்க் கருளை நயத்து நீங்குதல் பொருடனை யனையது மறிநீ. எண்ணின்றி யேதுணியு மெவ்வழி யானு மோடும் உண்ணின் றுருக்கு முரவோருரை கோட லின்றாம் நண்ணின்றி யேயு நயவாரை நயந்து நிற்குங் கண்ணின்று காம நனிகாமுறு வாரை வீழ்க்கும்.
சான்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்; ஆன்றாங் கமைந்த குரவர்மொழி கோட லீயார்; வான்றாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன் தான்றாங்கி விட்ட கணைமெய்ப்படு மாயி னக்கால். மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும்; பூவென் றெருக்கி னிணர்சூடுப; புன்மை கொண்டே பேயென் றெழுந்து பிறரார்ப்பவு நிற்ப; காம நோய்நன் கெழுந்து நனிகாழ்க் கொள்வ தாயினக்கால்.
125
21
22
23
24
நக்கே விலாவி றுவர்நாணுவர் நாணும் வேண்டார் புக்கே கிடப்பர் கனவுந்நினை கையு மேற்பர் துற்றூண் மறப்ப ரழுவர்நனி துஞ்ச லில்லார்
நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்ப மாக்கும்.
அரசொடு நட்டவ ராள்ப விருத்தி
அரவொடு நட்டவ ராட்டியு முண்பர்
புரிவளை முன்கைப் புனையிழை நல்லார் விரகில ரென்று விடுத்தனர் முன்னே.
பீடில் செய்திக ளாற்கள விற்பிறர்
25
26
வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத்
தோட லின்றி யுலையக் குறைக்குமே.
27
பொய்யி னீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்
டைய மின்றி யறநெறி யாற்றுமின்
வைகல் வேதனை வந்துற லொன்றின்றிக்
கௌவை யில்லுல கெய்துதல் கண்டதே.
28