மறைந்துபோன தமிழ் நூல்கள்
இகழ்த லோம்புமின் புகழ்சான் மறவர்
கண்ணிமைப் பளவிற் கணைசெல் கடுவிசைப் பண்ணமை புரவிப் பண்புபா ராட்டி
73
எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
வேந்தூர் யானைக் கல்ல
தேந்துவன் போலான்றன் னிலங்கிலை வேலே.
30
அதிரா தற்ற நோக்கு ஞாயிலுட்
கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல்
எதிரிய திருவி னிளையோ னின்றுந்தன் குதிரை தோன்ற வந்துநின் றனனே
அவன்கை யொண்படை யிகழ்த லோம்புமின் விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாஅன் வைகின னிவன்கைத் திண்கூ ரெஃகந் திறந்த
புண்கூர் யானை நவில்குரல் கேட்டே.
31
கட்டி யன்ன காரி மேலோன்
தொட்டது கழலே கையது வேலே
சுட்டி யதுவுங் களிறே யொட்டிய
தானை முழுதுடன் விடுத்துநம்
யானை காமினவன் பிறிதெறி யலனே.
32
அஞ்சுதக் கனளே யஞ்சுதக் கனளே
யறுகா வலா பந்த ரென்ன
வறுத்தலை முதியாள் அஞ்சுதக் கனளே வெஞ்சமத்
தென்செய் கென்னும் வேந்தர்க்
கஞ்ச லென்பதோர் களிறீன் றனளே.
33
வல்லோன் செய்த வகையமை வனப்பிற்
கொல்வினை முடியக் கருதிக் கூரிலை
வெல்வேல் கைவல னேந்திக் கொள்ளெனிற் கொள்ளுங் காலு மாவேண் டானே
மேலோன்
அறிவொடு புணர்ந்த நெறியிற் புரவிக்