பக்கம்:மருதநில மங்கை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை179


ஒருத்தி இயலார் செருவில் தொடியொடு தட்ப;
ஒருத்தி தெரிமுத்தம் சேர்ந்த திலகம், 35
ஒருத்தி அரிமாண் அவிர்குழை ஆய்காது வாங்க;
ஒருத்தி வரியார் அகல்அல்குல் காழகம்
ஒருத்தி அரியார் நெகிழத்து அணிசுறாத் தட்ப;
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள், அலவுற்று
வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக், காதலன் 40
தண்தார் அகலம் புகும்.

ஒருத்தி, அடிதாழ் கலிங்கம் தழிஇ, ஒருகை
முடிதாழ் இருங்கூந்தல் பற்றிப், பூவேய்ந்த
கடிகயம் பாயும், அலந்து.

ஒருத்தி, கணங்கொண்டு அவைமூசக், கையாற்றாள் பூண்ட 45

மணம்கமழ் கோதை பரிவு கொண்டோச்சி
வணங்குகாழ் வங்கம் புகும்.

ஒருத்தி, இறந்த களியான்இதழ் மறைந்த கண்ணள்
பறந்து அவைமூசக் கடிவாள், கடியும்
இடம்தேற்றாள்; சோர்ந்தனள்கை. 50
ஆங்க, கடிகாவில் கால்ஒற்ற ஒல்கி, ஒசியாக்
கொடிகொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரிஇழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு
வண்டலவர் கண்டேன் யான்.

நின்னை நின்பெண்டிர் புலந்தனவும், நீ அவர் 55
முன்னடிஒல்கி உணர்த்தினவும் பன்மாண்
கனவின் தலையிட்டு உரையல், சினைஇ, யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/181&oldid=1130144" இலிருந்து மீள்விக்கப்பட்டது