பக்கம்:மருதநில மங்கை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32


வேழம் வனப்புடைத்து

ருவனும் ஒருத்தியும் உள்ளம் ஒன்றுபட்ட உயர்ந்து அன்புடையராய் இன்புற்று வாழ்ந்திருந்தனர். ஒரு நாள் ஊர்க் காவல் குறித்தோ, பொருள் ஈட்டல் கருதியோ மனைவியை வீட்டில் விட்டுப்போன இளைஞன், போன இடத்தில் பரத்தையர் உறவு கொண்டு, மனைவியை மறந்து வாழ்ந்திருந்தான். அவன் மனைவி, கணவன், காவல் முதலாம் கடமை மேற்கொண்டு சென்றிருப்ப தாகவே கருதியிருந்தாள்.

ஒரு நாள் உண்மை வெளிப்பட்டுவிட்டது. பரத்தையர் உறவு கொண்ட அவன், ஆங்குத் தன் உள்ளம் விரும்பும் ஒருத்தியோடு மட்டும் உறவு கொண்டானல்லன். பரத்தையர் பலரோடும் தொடர்பு கொண்டு வாழ்ந்தான். ஒரு நாள், அவன், ‘நான் இன்ன இடத்தில் இருப்பேன், ஆங்கு வருக!’ என ஒருத்திக்கு இடம் குறித்து அனுப்பி யிருந்தான். அவளும் அவ்வாறே ஆங்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/217&oldid=1130239" இலிருந்து மீள்விக்கப்பட்டது