பக்கம்:மருதநில மங்கை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35


உன்னைக் கழறுதல் வேண்டுமோ?

ரசர் குடியில் வந்தவன் அவன். பணியாத பகைவர்களைப் பாழ் செய்யவல்ல பேராற்றலும், தன்னை அடைந்து, தன் ஆட்சிக் கீழ் வாழ்வார்களைப் பேணிக் காக்கும் பேரருளும் ஒருங்கே உடையவன். அவன் பகைவர், ஞாயிற்றின் ஒளி கண்டு ஓடி மறையும் இருளே போல், அவனை எதிர்த்து வாழ மாட்டாது இறந்து மறைவர். அவன் குடை நிழல் வாழ்வார், முழுமதி கண்டு மகிழ்ச்சிக் கடலுள் மூழ்குவார்போல், அவன் அருளால், அன்பால் அகம் மகிழ்ந்து வாழ்வர்.

அடங்காதாரை அழிக்கும் ஆற்றலும், அடைந்தாரை ஆட்கொள்ளும் அருளும் கொண்டு, ஆட்சி புரிந்து வந்த அவன், உலகத்து உயர்ந்தோர் அனைவரும் ஒருங்கே புகழ் தற்கேற்ற, வேறு பல பண்புகளுக்கும் நிலைக்களமாய் விளங்கினான். அவன் வாய்மையில் வழுவான். ஆலின்கீழ் அமர்ந்து, தன்யால் அறம் கேட்டு நிற்பார்க்கு, உண்மைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/237&oldid=1130262" இலிருந்து மீள்விக்கப்பட்டது