பக்கம்:மருதாணி நகம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 30 மருதாணி நகம்

வளர்ந்தது வழி.

அவளுக்கு முறை கொண்ட வீரப்பன் எதிர்ப்பட் டான். ராக்காச்சி அம்மன் காப்புக் கட்டுத் திருநாளின் போது, ஐந்தாறு இளவட்டங்களுடன் கட்சி சேர்ந்து கொண்டு மெனக்கெட்டு மல்லுக்கு வந்த சம்பவத்தை எண்ணினுள். பற்களைக் கருவிக்கொண்டாள். அவனையே இமை விளிம்பு கூட்டாமல் பார்த்தவாறே நடந்தாள். அவளுக்குப் பதிலாக, அவன் குனிந்த தலை நிமிராமல் குறுகி நடந்தான். மச்சான் புத்தி தெளிஞ்சு போச்சுப் போல !

மணியக்காரர் வீட்டை அடைந்தாள் பஞ்சவர்ணம். அங்கே வீட்டின் முன் பகுதியில் கும்பல் கூடியிருக்கக் கண்டாள். சதா பாயும் படுக்கையுமான மணியக்காரரின் துணைவியின் உயிர்நிலை கவலைக் கிடமாக இருப்பதை அறிந்தாள். நின்று நிதானிப்பதற்குள் உள்ளே இருந்த விளக்கு அணையக் கண்டாள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/132&oldid=612037" இலிருந்து மீள்விக்கப்பட்டது