பக்கம்:மருதாணி நகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 75

சம்பந்தப்பட்ட ஆளுங்களிலே ஒட்டு வீட்டுக்காரர் மவன் முத்தையனை மட்டுந்தான்கண்ணுப்புறத்தாலே காணலே. அந்தப் பிள்ளை மேலேஉள்ள குத்தம் ஒண்ணு ரெண்டா? பாக்கி அத்தனை புள்ளைகளும் எம் பேச்சுக்குக் கட்டுப்பட்டு வந்திருக்குதுங்க! ஊம்!” அவரது எண்ணங்களின் சக்தி முனைப்பாக இயங்கியது. அவர் தன் வசத்திற்கு வந்து, பஞ்சாயத்தைத் தொடங்க வாய் திறந்தார். அப்போது, வளையற்காரக் கிழவர் வேர்வை வழிய ஓடிவந்து ஒரு செய்தியைக் கூறினர்.

அந்தச் செய்தி: 'பெரிய இடத்துப் பிள்ளையான முத்தையன் தன் வீட்டுப் பெரிய கிணற்றில் விழுந்து சாகப் பிழைக்கக் கிடக்கிருளும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/77&oldid=611982" இலிருந்து மீள்விக்கப்பட்டது