மருதாணி நகம் 83
சத்தில் தவழ்ந்து எம்பி எம்பி விளையாடிக் கொண்டிருந் தது. இக்காட்சியைக் கண்ட கோவிந்தம்மா ஏதோ ஒன்றை எண்ணமிட்டு, நாணினுள். பிறகு, அவளது கண்நோக்கு, தன் தோழி பற்றியிருந்த மருதாணி இலைக் கொத்தின் பேரில் நிலைத்தது.
'கோவிந்தம்மா, அந்த மச்சுவீட்டு மச்சான் கதை முடிஞ்சிருச்சாமே ? பாவம் !...”
'நெசமாவா ?”
" ஆளும் !”
முத்தையனின் பண்ணையைச் சேர்ந்த வில்வண்டி ஒன்று காட்டுநரிப் பாய்ச்சலில் ஓடியது.
விரைந்து சென்ருள் கோவிந்தம்மா. கற்ருழையின் கூர்மை அவளுடைய சேல்விழிகளில் ஒட்டிக்கொண்டது.
மறைந்து சென்றது. ஆலத்தாம்பாடிக் காளே.
“ரொம்பப் பரிதாபந்தான், அக்கா !”
"ஆமா, தங்கச்சி !”
“மனுசன் இப்படி ஒரேமுட்டாக் கண்ணை மூடறதுக் குள்ள, ஏதுக்குத்தான் இம்பிட்டு வயித்தெரிச்சலை வேறே சுமந்துக்கிட்டுப் போய்த் தொலையனுமோ?"
"கண்ணை மூடினவங்களைப் பத்திப் பேசவேணும்னு, நாம கண்ணை முழிச்சுக்கிட்டு இருக்கிறதுதான் சிலாக் கியம் முடிஞ்ச கதையை இப்பைக்குக் கிண்டிக் கிளறு றதிலே, நமக்குத்தான் மண்டை உடை மிஞ்சும்!”