மர இனப் பெயர்கள் 33
கண்வலியைப் போக்குவதால், நந்தியாவட்டை, கண்வலி போக்கி’ எனப்பட்டது. பயன்.
கதலிதனம்
கதலி= வாழை. தனம் (முலை) போல, வாழைக்குலைப் பூ இருப்பதால், கதலிதனம் எனப்பட்டது. வடிவம்.
கதிரவன்
கதிரவன் = ஞாயிறு. எருக்கு வெப்பம் தரும் பொருள் ஆதலால் கதிரவன் எனப்பட்டது. ஞாயிறு என்னும் பொரு ளுடைய அருக்கன் என்னும் பெயரும் எருக்குக்கு உண்டு.
“மன்னனையுங் கையெடுக்க வைத்தெயிற்றி னோயகற்றி
உன்னு பிணிப்பணியை ஒட்டுதலால் - சொன்னேன் எருக்கெனவே பூமி யினிலே விளங்கும் அருக்கம் அருக்கன் எனலாம்' -
என்பது தேரையர் வெண்பாப் பாடல்.
கந்தகுடம்
- ஆப்பிள் பழம் குடம் போன்றிருப்பதால் இப்பெயர்
வந்தது. வடிவம்.
கபமகற்றி
பாவட்டைச்செடி ஐயத்தைப் (கபத்தைப்) போக்கு
மாதலின் கபமகற்றி எனப்பட்டது. பயன்.
கபவாதநாசனி = கபவாதத்தைப் போக்கும் அரத்தைக்
குரியது இப்பெயர். சிற்றரத்தையைக் குடும்ப மருத்துவ
மாகப் பெண்கள் பயன்படுத்துவதைக் காணலாம். பயன்.
கபவாதம் அறியான் = கொடுக்காய்ப்புளி கபவாதத்
தைப் போக்குமாம். பயன்.