இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. நாகாஸ்திரப் படலம்
இம்முறை யாக இருக்கும் காலம், எம்
கணவரை ஒருநாள் மருமகன் கண்டு
வழக்குப் பேச வந்தான் அம்மா!
வந்தவன்,
அம்மான் என்றோர் அடக்கமில் லாமல்,
5
மாமன் என்றோர் வணக்கமில் லாமல்,
கூறின மொழியெலாம் கூறுவேன், அம்மா!
“ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு[1]
ஆயிரம் பணத்துக் கதிகம் வருமோ?
விளையை[2] நிலமாய் வெட்டித் திருத்த
10
பனையை விற்ற பணம் போதாதோ?
கண்ணி யம்மை கலியா ணத்தில்
கால்கா சுமக்குக் கைப்பொறுப் புண்டோ?
மருமகள் என்றொரு மஞ்சா டிப்பொன்[3]
- ↑ 8. அடியந்திரச் செலவு - கருமாதிச் சடங்குக்குரிய செலவு.
- ↑ 10-11. விளை-புன்செய் நிலம். புன்செய் நிலத்தில் நின்ற பனைமரங்களை வெட்டின பிறகுதான் அதை நன்செய் நிலமாகத் திருத்த முடியும். வெட்டின பனைகளை விற்றதனால் கிடைத்த பணம் புது நிலம் திருத்துவதற்குப் போதாதோ என்று மருமகன் காரணவரிடம் கேட்கிறான்.
- ↑ 14. மஞ்சாடி- கழஞ்சில் இருபதிலொரு பாகம் : பொன்னை நிறுக்கும் ஓர் அளவு.