பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - மறவர் சீமை

பிரகடனப்படுத்திக் கொண்டனர் செம்பி நாட்டு மறவர்களின் மூத்த குடியினர். இவர்களது ஆட்சிப்பரப்பு மறவர் சீமை என்றும், இவர்களது தலைவர்கள் சேதுபதிகள் என்றும் அழைக்கப்பட்டனர். இராவன சம்ஹாரத்திற்காக இராமபிரானால் அமைத்ததாகக் கருதப்படும் சேது அணையை உள்ளடக்கியதாக இந்தப் பகுதி அமைந்திருப்பதால், இதனைச் சேதுநாடு என்றும் இலக்கியங்களில் குறிக்கப் பெற்றது. ஏற்கனவே இந்தப் பகுதியில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த ஏனைய ஆறுபிரிவு மறவர்களை, விட இந்த செம்பி நாட்டு மறவர்கள் ஆற்றலிலும், அதிகாரத்திலும் (நிர்வாகத்திலும்) சிறந்து விளங்கியதால், இவர்களது தலைமையை இங்குள்ள மறவர்கள் தமது மூத்த குடியினராக ஏற்றிப் போற்றி வந்தனர். இந்த மரபினர் கி.பி.15ஆம் நூற்றாண்டு முதல் தமது தாய்மொழியான தமிழ் வளர்ச்சிக்குத் தாளாதுதொண்டாற்றினர். வடுகர்களது ஆட்சியில் வறுமையுற்று வாடிய தமிழ்ப்புலவர்களுக்கு வான்மழைபோல் அமைந்து பொன்னும், பொருளும் ஊரும் பேரும் வழங்கி உதவினர். இவர்களது தமிழ்க் கொடையினை விஞ்சியவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. இதனைப் போன்றே மடங்களையும், அன்ன சத்திரங்களையும் ஆங்காங்கு நிறுவி பயணிகளது பசிப்பிணியையும், தளர்ச்சியையும் நீக்கி வந்தனர். பொதுவாக மழைவளம் குன்றிய இப்பகுதியில் காலத்தே கிடைக்கும் மழைப் பொழிவினை அக்கறையுடன் அணைகளில் தேக்கி வைத்து, அவைகள் காலமெல்லாம் வேளாண்மைக்குப் பயன்படும் வண்ணம் கண்மாய்களையும், கால்வாய்களையும் அமைத்து வரலாற்றுப் புகழ் பெற்றனர்.

இவைகளுக்கெல்லாம் மேலாக இகத்திற்கும், பரத்திற்கும் ஏற்ற இறை பக்தியில் திளைத்து நின்று பல கோவில் பணிகளையும் செய்துள்ளனர். தேவார காலம் முதல் சின்னஞ்சிறு கற்றளிகளாக இருந்த இராமேஸ்வரம், திரு உத்திரகோச மங்கை, திருச்சுழியல், திருப்பத்துர், திருவாடாணை, காளையார்கோவில் ஆகிய திருத்தலங்களில் சிறந்த கோயில் கட்டுமானங்களை அமைத்தும், திருக்கோட்டியூர், திருப்புல்லணை, திருமருதூர்,

1.ஆப்பநாடு, உப்புக்கோட்டை, ஒரிக்கோட்டை, கொண்டயங்கோட்டை,

அகத்தா, குறிச்சிக்காடு Raja Ram Rao - Manual of Ramnad Samasthanaarm 1891-Page No 33