பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில், மனத்தைப் பதிய வைத்துக் கொண்டு வெளியுலகத்தின். மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விருப்பங் களிலும், அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல் வாழ் வதிலே பயனில்லை."-வருங்காலம். நமது தேசம் முன்போலக் கீர்த்திக்கு வரவேண்டு மால்ை உண்மையான வகுப்புகள் ஏற்படவேண்டும். பொய் வகுப்புகளும் போலிப் பெருமைகளும் ருசிக்க வேண்டும். இது நம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து.' -பிராமணன் யார் : தராசு என்னும் நூலில் பாரதியார் தம் மனத்திலே தோன்றிய பல அருமையான கருத்துக்களே ஆனித் தரமாகக் கூறியுள்ளார். அந் நூலிற்குத் தராசு என்னும் பெயர் வைத்தமைக்குரிய காரணத்தை அவர் பின்வரு மாறு கூறியுள்ளார். அப்பகுதி மிகவும் சுவை பயப்பதாய் உளளது. இவ்வுலகமே ஈசனுடைய விளையாட்டு.” உலகத்தை அறிய வேண்டுமானல் விளையாட்டுப் பழக்க மும் வேண்டும். எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலாமென்ற யோசனை யுண்டாயிற்று. பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிடு மாதலால் * .L_l© சரக்குக் கடை" என்று மகுடமெழுக உத்தேசித்தேன். அது அதிக விளையாட்டாக முடியு மாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டி யாருக்கும் சினேகம். அவரைப் போல் நாம் ஒரு பல சரக்குக் கட்ை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படும் 2