பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பொன்மொழி நடைமுறைக்கு வரவேண்டுமானல் நாம் ஒவ்வொருவரும் இந்நூலை வாங்கி வைத்துத் துணைவி யருடன் இருந்து படித்து அதன்படி நடக்க முயலுதல் வேண்டும். அப்படித் தமிழ் மக்கள் செய்வார்களாயின் தமிழ் நாடே பல்கலைக் கழகம் பல பொதுளிய ஒரு பல்கலைக்கழக உலகமாகக் காட்சி நல்கும் என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை. பாரதிதாசன் தொகுதிகள் என்பவை பாரதிதாசன் அவர்கள் தொடக்கத்திலே அவ்வப்போது பாடிய கவிதைத் துணுக்குகளும், கவிதைக் கதைகளும், கவிதை ஒரங்க நாடகங்களும், பிறவும் சேர்ந்தவையாகும். இவற்றிலே முதல்முதல் வெளியிட்ட தொகுதியே மிகச் சிறந்தது : பாரதிதாசனைத் தமிழ்நாடு முழுதும் அறியக் காரணமாக இருந்தது இதுவே எனில் அது மிகையன்று. பாரதிதாசனேயும் அவர்தம் கவிதைச் சிறப்பையும் இந்த ஒரு நூலைக் கொண்டே அளந்து விடலாம். புரட்சிக் கவிஞர் தமிழகத்திலே வேறெந்தக் கவிஞருக்கும் கிடைக் காத இப்பட்டம் முதன் முதலாகப் பாரதிதாக அக்குக் கிடைத்துள்ளது. * இப்பட் டம் இவர் க்கு முன் னே யாருக்கும் கிடைக்கவில்லை . இனிப் பின்னேயும் யாருக் காவது கிடைக்கும்ா என்பதும் ஐயமே. கவிஞர்தம் கொள்கை காரணமாக அவரை வெறுப்பவர்களுக்குக் கூடப் புரட்சிக் கவிஞர் என்ருல் பாரதிதாசனின் கினைப்பே வரும். அந்த அளவுக்குப் பாரதிதாசன் அவர்கள் கவிதை உலகிலே யாரும் செய்யாத ஒர் அரும் பெரும் புரட்சியைச் செய்தார் : புரட்சிக் கவிஞர் என்ற