பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஆபத்தில் எந்த அளவுக்கு மனிததேகம் மகாசக்தியை பெற்று விடுகிறது என்பதை அறிந்து கொண்டோம். மகா சக்தியைக் கொண்டு விளங்கும் மனித தேகத்தை, தெய் வம்போல் காக்கவேண்டும் என்று இப்படிப்பட்ட காரியங் களைப் பார்க்கும்போதுதான் கூற வேண்டும் போலிருக் கிறதோ!


ஒரு மனிதன் அல்லது விளையாட்டு வீரன், ஒரு காரியத்தில் ஈடுபடும் பொழுது, அவனது உடல் பலத்தை முழுவதும் பயன்படுத்தியே முனைகிறான், முயற்சிக்கிறான். ஆனால், நன்கு பயிற்சி செய்து, பழக்கப்பட்ட ஒரு மனிதன் அல்லது விளையாட்டு வீரன், அந்த சாதாரண மனிதன் அல்லது விளையாட்டு வீரன் செய்வதை விட, இன்னும் சிறப்பாக, செயல்படுகிறான். அதற்குக் காரணம், அவன் தனக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்தியை தனது பயிற்சியின் மூலமாக வெளிக்கொண்டு வந்து விடுவதுதான்.


இது எப்படி முடியும் என்ற வினா எழும்புவது எனக்குப் புரிகிறது.


சரித்திரம் கூறும் ஒரு சான்று


ஒரு வேலெறியும் நிகழ்ச்சியை (Javelin) இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.


வேலெறிவது என்பது, மனிதர்களுக்குரிய சாதாரண எறியும் உணர்வின் வெளிப்பாடுதான்.


இந்த வேலெறியும் தூரம், மனிதர்க்கு மனிதர் வித்தியாசப்படுகிறது. காரணம், அந்தந்த மனிதர்களின் உடல் பலம்தான்.


இந்த எறியும் நிகழ்ச்சியில் கொஞ்சம் பழக்கப்பட்ட வீரன், உடல்பலம் உள்ளவர்களை விட, இன்னும் அதிசய