பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 24 H.


ஆஉண்மைகள், இர்க்கத் தரிசனம் போன்ற உண்மை :ாக இருந்தன.


அந்த அருமையான ஆறுவார கால உடற்பயிற்சிகள். அந்தக் கிழவர்களின் இரத்த அழுத்தத்தை சீர் செய்தன. சீரான இரத்த ஓட்டத்திற்கு வாய்ப்பான வழிகளை வகுத்து விட்டன்


தேவையற்ற திரட்சிகளான கொழுப்புப் பகுதிகள், தீ பட்ட மெழுகு போலக் கரைந்தோடின. கச்சிதமான உடலமைப்பை இனம் காட்டத் தொடங்கின.


திக்கித் திணறி விடும் சுவாசங்கள் தெளிவாக வந்து போயின. உள்ளுக்குள்ளே செல்லும் உயிர்க் காற்றின் அளவும் தேவையை திருப்திப்படுத்தும் வண்ணம் சேர்ந்தது.


நரம்புகள் நலிவிலிருந்து விடுபட்டு, நலம் பெற்றன. நரம்புப் படபடப்பு, நினைவு பதைபதைப்பு முதலானவை கள் தடம் மாறி விடை பெற்றன.


இதிலிருந்து மேலும் ஒர் உண்மை வெளிப்பட்டது. அதாவது உடலால் சுறுசுறுப்பாக இருந்து, பணியாற்றிக் கொண்டிருக்கும் வயதானவர்களுடைய வாழ்க்கை இனிமை யாக அமைகின்றது. இளமை உணர்வுகளும், இளமை செயல்பாடுகளும் இதமாகத் தங்கியிருக்கின்றன. அவர் களுக்கு வாழ்வு ஆனந்தமயமாயிருக்கிறது.


உடல் உழைப்பு இல்லாமல். மனதால் நினைத்து வாழ் கின்றவர்கள் பல்வேறு, கற்பனைகள் படையெடுக்க, பல்வேறு குழப்பங்கள் வழி மறிக்க, உடலுக்குள்ளே உறுப்புக் கள் குறுகுறுக்க, வேண்டாத ஒரு சுமையான வாழ்வினையே வாழ்கின்றார்கள்.