என்றும்,
என்றும்,
என்றும்,
- முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்
119
“இந்நிலத்தின் கடைக்கோடிவரையில் ஊடுருவிப் பரவி நிற்கும் அவர்கள் தம் மந்திர ஆற்றல்களால் இந்திரனை வெல்லமாட்டாராயினர்”
66
'இந்திரன் இலிபிசனுடைய வலிய அரண்மனைகளைத் தகர்த்தனன்'
'தனது கூரிய குலிசப்படையால் அவர்களுடைய கோட்டைகளைப் பிளந்து துகளாக்கினான்.”
என்றும்,
66
சுவித்திராளின்
ளங்கன்றே, ஓ மகாவானே,
எமக்கு
துக்கிரனுடை ய வீடுகளினிடையே
நிலங்கிடைத்தல்
வேண்டி நடந்த போரில்
எமக்குதவி செய்கின்றனை!”
என்றும் போந்த வேண்டுகோள் மொழிகளினாலேயே, ‘தஸ்யுக்கள்’ என ஆரியரால் அழைக்கப்பட்ட பண்டைத் தமிழர்கள் சல்வத்திற் சிறந்தாராயிருந்தமையும், அவர் ஆரியர் செய்து போந்த சிறுதெய்வ வெறியாட்டுக் கிரியைகளைத் தாம் தழுவா திருந்தமையும், அவர்கள் பொன்னாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட உயர்ந்த அணிகலங்களைப் பூண்டிருந்தமையும், அப் பழைய தமிழ்மக்கள் இவ் விந்திய நாட்டின் கடைக்கோடி வரையில் எங்கும் பரவி யுயிர் வாழ்ந்தமையும், அவர்கள் மந்திர ஆற்றலிற் சிறந்தாராயிருந்தமையும், இலிபிசன் என்னுந் தமிழ்மன்னன் வலிய அரண்மனைகள் பல உடை யனா யிருந்தமையும், பொதுவாகத் தமிழ்மன்னர் பலருந் திண்ணிய கோட்டைகள் அமைத்து அவற்றினுள்ளிருந்து செங்கோல் சலுத்தினமையுந், தமிழ் மக்கள் தொகுதி தொகுதியாக வீடுகளமைத்து வாழ்ந்த நாடு நகரங்களினிடையே ஆரியர் தாமுங் குடியிருக்க நிலம் வேண்டினமையும் நன்கு பெறப்படுதல் காண்மின்கள்!