294
மறைமலையம் - 10
ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீ தற்றோர்
உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
-மாங்குடி மருதனார்
எல்லாப் பொருளும் இதன்பால் உளதிதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.
அறந்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்த நெய் செஞ்சொல்தீத் தண்டு - குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்ளிருள் நீக்கும் விளக்கு
மதுரைத் தமிழ்நாகனார்
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் அல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து.
அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம் வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு.
—
- நப்பாலத்தனார்
―
- தேனீக்குடிக் கீரனார்
- கொடிஞாழல் மாணி பூதனார்
சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து -முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள்வெண் பா.
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.
கவுணியார்
- இடைக்காடர்
- ஔவையார்