உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

தோன்றலும் மறைதலும் ஆன்றறி யுங்கால் மண்ணோர் வாழ்க்கையிலின்னலு மின்பமும் மாறி மாறி வீறுதல் பெறுமே

செழுமதி யென்னுங் கொழுநனை யிழந்து முதிரெழில் போன ஆம்பல் எதிர்விழிக்கு இன்பம் பயவா இயல்புணர் விடத்துஈங்கு ஆருயிர்க் காதலர்ப் பிரிந்த வாரிருங் கூந்தன் மடவார் எய்துஞ்

சாந்துயர் பொறுத்தற் கரிதெனப் படுமே.

75

(25)

(இ-ள்) இலைகிளர் பூண்டுக்குத் தலைவன் ஆகிய சுடர் ஒளிமதியம் இலைகள் விளங்கும் மருத்துச் செடிகளுக்குத் தலைவனாகிய மிகுந்த ஒளியினைத் தரும் முழுநிலாவானவன், குடபால் வரையின் ஒருபுறம் செல்லாநிற்ப - மேற்கின்கண் உள்ளதாகிய அத்தகிரியிலே ஒருபக்கஞ் சென்று சேராநிற்க, ஒருபுறம் - மற்றொரு பக்கத்தே, வைகறை என்னும் கைவல் பாகனை -விடியற்காலம் என்று சொல்லப்படுங் கைதேர்ந்த தேர்ப்பாகனை, முன்செல விடுத்து - முன்னே போகவிட்டு, பொன் போல் ஞாயிறு கீழ்பால் எல்லையில் கிளரும் - பொற்றிரளை யொத்த பகலவன் கிழக்குத் திசையின் மருங்கே விளங்கா நிற்கின்றது, ஒருகால் ஈர் இடத்து ஈர்ஒளிப்பிண்டம் தோன்றலும் மறைதலும் ஆன்று அறியுங்கால் - ஒரே காலத்தில் இரண்டிடங்களில் இருவகை ஒளிப் பிழம்புகளில் ஒன்று தோன்றுதலையும் மற்றொன்று மறைதலையும் அமைதியாக ஆராய்ந்தறியுமிடத்து, மண்ணோர் வாழ்க்கையில் இன்னலும் இன்பமும் மாறி மாறி வீறுதல் பெறும் இம் மண்ணுலகத்தவர் வாழ்வில் துன்பமும் இன்பமும் மாறி மாறி மிக்குத் தோன்றுதல் விளங்கப்பெறும், செழுமதி என்னும் கொழுநனை இழந்து - அழகிய திங்கள் என்னுங் கணவனை இழந்து, முதிர்எழில் போன ஆம்பல் - அதனாற் றனது சிறந்த அழகு கெட்ட அல்லிப் பூவின் தோற்றமானது, எதிர் விழிக்கு அதனை நேர் நின்று நோக்குங் கண்களுக்கு, இன்பம் பயவா இன்பந்தராத, இயல்பு உணர்விடத்து - தன்மையினை உணர்ந்து பார்க்குமிடத்து, ஈங்கு - இவ்வுலகத்திலே, ஆர்உயிர்க் காதலர்ப் பிரிந்த - தம் அரிய உயிர் போன்ற கணவரைப் பிரிந்த, வார் இருங் கூந்தல் மடவார் - நீண்ட கரிய கூந்தலையுடைய மங்கையர்,

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/108&oldid=1580065" இலிருந்து மீள்விக்கப்பட்டது