பாமணிக் கோவை
-
87
மான்கள் அமைதரு
-
இமயமலையின் கண்ணேயுள்ள, எழில் உடை தூய பனிதூங்கு அடுக்கலும் அழகு வாய்ந்த மான்கள் பொருந்தினவுந் தூய்மையான பனிக்கட்டிகள் தங்குவனவும் ஆன மலைப் பக்கங்களையும், மரவுரிஞான்ற விரிகிளை மரநிழல் - மரநார்களினால் நெய்த ஆடைகள் தொங்காநின்ற விரிந்த கிளைகளையுடைய மரங்களின் நீழலிலே, கலைத்தடக்கோட்டில் ஆண்மானின் பெரிய கொம்பிலே, இடக்கண்தேய்க்கும் தனது - டதுகட் கடையை உரைசும், விழைவுறுபேடை மானும் புணர்ச்சி வேட்கையுடைய பெண்மானையும், வரைதல் வேண்டினேன் - எழுதற்கு விரும்பினேன், இது தெரிமோ - இது தெரிவாயாக என்றவாறு, மற்று : அசைநிலை, தெரிமோ என்பதில், மோ : முன்னிலையசைச்சொல் (தொல்காப்பியம், டையியல்)
-
காம்புகாது செருகிக் கன்னமேற் றொங்கும் நரம்புடைச் சிரீடம் நான்வரை திலெனால், மழைநாள் மதியின் தழைகதிர் புரையுந் தாமரை மென்னூல் காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவெழு திலெனே.
-
(47)
-
(இ-ள்) காம்பு காது செருகிக் கன்னம்மேல் தொங்கும் நரம்புடைச்சிரீடம் நான் வரைந்திலென் காம்பு காதிலே செருகப்பெற்றுக் கன்னங்களின்மேல் தொங்காநின்ற நரம்பு களையுடைய வாகை மலரை நான் எழுதவில்லையே, மழைநாள் மதியின் தழைகதிர்புரையும் - மழை பெய்துவிட்ட நாளின்கட் டோன்றுந் திங்களின் ஒளிமிக்க கதிர்களை யொக்கும், தாமரை மெல்நூல் - தாமரைத் தண்டினின்றும் எடுத்த ஒரு மெல்லிய நூலையேனும், காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவு எழுதிலெனே - விழைவினை யுண்டாக்கும் அவடன் கொங்கை களின் நடுவிலே விளங்க அவளது வடிவத்தினை எழுதிற்றிலேனே! என்றவாறு. ஆல் : அசை.
மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகிநீ அணவுவது கருதித்தேன் பருகாமை அறியாய்.
(48)
இ-ள்) மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகி - மணங்கமழாநின்ற பூவின்கண்ணே நின்னை மருவலாம் என்னும்