உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முனிமொழிப்பிரகாசிகை

127

படுவதன்றி ஏனைய அப்பெயர்க்குரியவாதல் செல்லாமை யுணர்ந்து கொள்க. உபநிடதப் பொருளையே முதலாகக் கொண்டெழுந்து உண்மை ஞானத்தை யுள்வாறே யினிது விளக்கும் 'வேதாந்த சூத்திர’த்தை எடுத்தோதுதல் ஔவையார்க்குக் குறிப்பு வேறுபடுவதன் றென்பதற்கு அவர் அதன் முதனூலாகிய 'திருநான் மறைமுடி வைக்கிளந் தோதலே சான்றாதல் காண்க.

இனி, 'முனிமொழியும்' என்பதில் 'முனி' என்னுஞ் சொல்லுக்கு 'வியாதமுனி' என்று பொருள் கோடல் யாங்ஙனம்? அகத்தியர் முதற் பிறரு முளராலோ வெனின்; - அன்றன்று, உலகமெல்லாம் ஒருங்குதிரண்டு பழிச்சும் பருமையராயினும் அவர்க்கு வேத அகத்தியர் வே வேதவ சிட்டர் வேதகௌதமர் எனப் பெயர் வழங்கக் கண்டிலம், வியாத முனிவரையே வேதவியாசர் வேத முனிவர் என்று வழங்கக் காண்டலானும், வேதத்தில் இவர்க்குள்ளவுரிமை வேறு பிறர்க்கிருப்பக் காணாமையானும், சைவ எல்லப்ப நாவலர் “மிக்க வேதவியாசர் விளம்பிய" எனவும், வில்லிபுத்தூரார் "முனிராஜன் மபாரதஞ் சொன்ன நாள்” எனவுங், கச்சியப்ப சிவாசாரியார்,

66

கரையறு வேதமாங் கடலை நான்கவாய்ப் பிரிநிலை யாக்கியே நிறுவு பெற்றியாற் புரைதவிர் முனிவரன் புகழ்வியா தனென் றொருபெயர் பெற்றன னுலகம் போற்றவே"

சொல்லுக்கு

எனவுங் கூறுதலானும் 'முனி' என்னுஞ் 'வியாதமுனிவர்' என்று கோடலே பொருந்துவதாமன்றி வேறு கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதென் றொழிக. அல்லதூஉம், பரந்துகிடந்த வேதப்பொருளை யெல்லாம் ஒருங்கு திரட்டிப் பாகுபடுத்துதவிய அவ்வியாசரை, வேதமே ஸஹோவாசவ்யாஸ: பாராஸர்ய:' என்னும் மொழியால், பராசரகுமாரராகிய வியாசர் பொய்சொல்லா தவரென் றினிது புகழ்ந்தோதுதலானும், கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் இவரை ஆல்வரு கடவுளை யனைய தன்மையான்" என்றுரைத்தலானும் அங்ஙனம் பொருள் கோடலே ஔவையார்க்குக் கருத்தாமென்பது இனியேனு முணர்ந்து கொள்க. குணமென்னுங் குன்றேறி நின்றவிவ்வியாத

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/160&oldid=1580117" இலிருந்து மீள்விக்கப்பட்டது