146
- மறைமலையம் – 11
11*
கால், அடி என்னும் சொற்களுக்குப் பதம் பாதம் என்பன வற்றையும் கொண்டு வந்து நுழைத்தல் அவ்வத்தமிழ்ச் சொற்களாகி ணய உறுப்புகளை வெட்டி எறிந்து விட்டு அவை போன்ற ஏனைமொழிச் சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின் கண் ஒட்டவிடுதலைப் போல்வது அன்றோ!
பொருள்களை, வஸ்துக்கள் என்று சொல்வது எதற்கு? ஒளியைப் ‘பிரகாசம்' என்றும், ஓசையைச் ‘சப்தம்’ என்றும், சுவையை ‘ருசி' என்றும்,
L மணத்தை ‘வாசனை’ என்றும்,
தித்திப்பு, இனிப்பை ‘மதுரம்’ என்றும்,
தொடுதல், உறுதலை ‘ஸ்பர்சம்' என்றும்
கல்வியை ‘வித்தை' என்றும்,
தண்ணீர், சோறு, உணவு என்பனவற்றை ‘ஜலம்' அந்நம் ஆகாரம் என்றும்,
ஆடையை ‘வஸ்திரம்' என்றும்,
கட்டாயம் என்பதை ‘அவஸ்யம்' என்றும்,
தாய், தந்தை, மகன், மகள், உறவினரை ‘மாதா’, ‘பிதா’, புத்ரன்,புத்ரி, பந்துக்கள் என்றும்,
துன்பம், கேடு, குடும்பம் என்பவற்றைக் கஷ்டம், நஷ்டம் சம்ஸாரம் என்றும்,
தலைமுழுக்கு,
வழிபாடு, இளைப்பு, தூக்கம் முதலியவைகளை ‘ஸ்நாநம்’, 'பூஜை', 'ஆயாசம்’ நித்திரை என்றும்,
முயற்சி, ஊழ்வினை, உயிர், சிவம், கடவுள் என்பவற்றைப் பிரயத்நம், விதி, ஆத்மா, ஈசன், பிரமம் என்றும்,
நினைத்தல், எண்ணல், சொல்லல் என்பவற்றை 'ஞாபகம்', 'பாவநை', வசனித்தல் என்றும்,
தூய தமிழ்ச் சொற்களை ஒழித்து வடசொற்களைக் காண்டு வந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பது தானா நமது அருமைச் செந்தமிழ் மொழியை வளர்ப்பது? அறிவுடையீர்! கூறுமின்கள்!”