இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ் மலை
147
தனித்தமிழ் இயக்கம் கண்ட அடிகளார் களார் செயலைக் கலிகாலக் கொடுமை என்று வெறுத்துப் பழித்தாரும் இருந்தனர். அவர்களை நோக்கி, “பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும் தம் தனித்தமிழ்த் தாயைப் பிறமொழிச் சொற்கள் என்னும் கோடரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத் தீவினைச் செயலைப் புரியும் இவர் தம்மைத் தடுத்து எம் தமிழ்த் தாயைப் பாதுகாக்க முன் நிற்கும் எம் போல்வாரது நல்வினைச் செயல் ஒரு காலும் கலிகாலக் கொடுமை ஆகாது என்று உணர் மின்கள் நடுநிலையுடையீர்” என்று மறுத்தெழுதினார் அடிகள். ‘குயிலிசை' கேட்ட நாம், ‘பள்ளியெழுச்சி' பார்ப்போம்.