162
❖ - 11❖
மறைமலையம் – 11
L
பள்ளியில் படித்த காலத்திலேயே, வெளிக்கல்வி கற்றவர் அல்லரோ அடிகள்! அவர் பள்ளிப் பணியொடும் அமைவாரா? அந்நகரில் சிறந்து விளங்கிய சைவசித்தாந்த சபைகளில் தொடர்பு காண்டு இடை இடையே சொற்பொழி வாற்றினார். பேராசிரியர் சுந்தரனார் பணியாற்றிறய அரசர் கல்லூரியில் 12-9- 86 ஆம் நாள் 'நாடகத் தமிழ்' என்னும் பொருளில் அரியதொரு பொழிவு செய்தார். இவ்வாறு இரண்டரைத் திங்கள் திருவனந்தபுரத்தில் பணியாற்றினார் அடிகளார். அவ்வூர்ப் பருவநிலை அடிகள் உடல் நிலைக்கு ஏற்று வாராமையால் தம் பணியை விடுத்து நாகைக்கே திரும்பினார்.
துகளறுபோத உரை :
அடிகளார் நாகைக்குத் திரும்பியது அறிந்த சோம சுந்தர நாயகர் சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச் செய்த ‘துகளறு போதம்' என்னும் நூலை விடுத்து, அதற்கு உரை வரையுமாறு கட்டளையிட்டார். அந் நூலின் நூறு பாடல்களுக்கும் சீரிய உரையெழுதி நாயகர்க்கு அனுப்பினார் அடிகளார். அவ்வுரையின் நடை நயம், பொருட் சிறப்பு ஆகியவற்றைக் கண்ட நாயகர் "மாதவச் சிவஞான முனிவர் உரையொடும் ஈதொப்பது” எனப் பாராட்டி, அந் நூலைத் தம் செலவில்தாமே வெளியிட்டார்.
முதற்குறள் வாத நிராகரணம் :
அந்நாளில் சென்னையில் வாழ்ந்த ஒருவர் திருக்குறள் முதற்குறளுக்கு 'மாயாவாதக் கொள்கை’யின்படி ‘முதற் குறள் வாதம்' என்பதொரு நூலை இயற்றி வெளியிட்டார். அதனை மறுக்க வெண்ணிய நாயகர் மறைமலையாரை எழுதத் தூண்டினார். அதன்படி, 'முதற்குறள் வாத நிராகரணம்' என்பதொரு நூலை அடிகளார் இயற்றினார்.
உண்மை விளக்கம் :
நாயகரிடம் கொண்முடிபு (சித்தாந்த)ப்பாடம் கேட்டவருள் ஒருவர் நல்லசாமிப்பிள்ளை என்பார். அவர் சிவஞான போத நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். அவர்