உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

199

ன்

உணர்ந்து தக்க பொழுதில் 'தமிழ்க் காசு’ அவர்களு பல்லவபுரம் சென்றார். தமிழ்க் காசு வலியுறுத்தினார்; திரு. வி. க.வும் வேண்டினார்.திருமணத்திற்கு இசைவு தந்தார் அடிகளார். 2-9-1927 இல் மயிலை கபாலீசுவரர் திருக்கோயிலில்

அரங்கர் அம்பிகை திருமணம் ம் நிகழ்ந்தது. அடிகள்

அம்பிகையாரைக் கொடுப்ப அரங்கர் “பெண்ணின் நல்லரோடும் பெருந்தகைக் கோலம் கொண்டு” திகழ்ந்தார்.

பேரறிஞர் கா.சு.; பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்கர்; தமிழ்த்தென்றல் திரு. வி.க. ; மணிதிருநாவுக்கரசர்: கா.நமச்சிவாயர்; ச. சச்சிதானந்தர்; பாரிப்பாக்கம் கண்ணப்பர்; இசைவல்லார் சாம்பமூர்த்தியார்; நெல்லை சுந்தர ஓதுவார்; பரலி சு. நெல்லையப்பர்; செந்தில் ஆறுமுகனார்; பெரும்புலவர் மு. சுப்பிரமணியனார் இன்ன பெருமக்கள் முன்னிலையில் விழா பெருஞ்சிறப்பு உற்றது. இசையரங்கு, இசைக்காதை, வாழ்த்து, அழைப்பு இன்னவெல்லாம் சீர்சிறக்கச் செறிந்தன. அரங்கர் அம்பிகை வாழ்க்கை பாளையங் கோட்டையில் தொடங்கியது. நீலாவுக்கு அஞ்சல் :

வன்கண்மையதா?

மென்

பிறவும்

அடிகளார் உள்ளம் கண்மையதா? சூழலும் செயலும் காலமும் எவரெவரையெல்லாம் எப்படி எப்படி ஆட்டிப் படைத்து விடுகின்றன! ஒன்றாய் உருகி நின்ற உள்ளமும், வேறாய் இருவேறு துருவங்களாய்ப் பிரியும் இயல் ஏற்பட்டுவிடுகின்றதே! இதோ ஓர் அஞ்சல்; அடிகளார் தம் அருமை மகளார்க்கு வரைந்தது; அடிகளார் உள்ளத்தை உள்ளபடி காட்டுவது:

ஓம் சிவம் டி.எம்.அச்சுக்கூடம்,

பல்லாவரம். 7-12-1927

அருமை திருமிகு திருவரங்க நீலாம்பாளுக்கு அம்மையார் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக!

நீங்கள் இருவரும் அறிவும், உங்கு நலமுடன் சேர்ந்த அன்றைக்கே எழுதிய கடிதங்கள் இரண்டு பெற்றுப் பேரின்ப வெள்ளத்துள் திளைத்தேம் ஆயினேம். நீலாவும் அவள்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/232&oldid=1580189" இலிருந்து மீள்விக்கப்பட்டது