உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ

பின்னிணைப்பு

6

259

செய்தல் வேண்டும். ஏனென்றால், நாடோறும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபடும் ஏழைமக்களும், செல்வமிகுதியாற் கடவுளை மறந்து சிற்றின்பத்தில் கிடந்துழலும் செல்வர்களும், இவ்விருவர் நிலையிலும் சிறிது சிறிது ஒட்டி நிற்கும் மற்றைப் பொதுமக்களும் இத்திருவிழாக் காலங்களிலேதாம் தத்தம் முயற்சிகளினின்றும் ஓய்வுபெற்று நீராடி நல்ல ஆடை அணிகலன்கள் அணிந்து, தம் மனைவிமக்கள் சுற்றத்தாருடன் மன L மகிழ்ந்து கடவுள் நினைவும் வணக்கமும் உடையராய்ப் பலஊர்க்காட்சிகளையும் பலமக்களின் தோற்றங்களையும் கண்டு இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று இன்புறு கின்றனர். இத்திருவிழாக்களும் திருக்கோயில்களும் இல்லை யானால் இந்நாடும் ஏனை அயல்நாடுகளைப்போல் ஓயாத சண்டைக்கு L மான போர்களமாகவே இருக்கும். திருவிழாக்களை ள இன்னும் செவ்வையான நடைபெறச்செய்வதோடு, அத்திரு விழாக்களின் உண்மையும் பயனும் எல்லார்க்கும் எடுத்துச் சொல்லுமபடி கல்வியிற்றேர்ந்த அறிஞர்களுக்குத் தக்க பொருளுதவி செய்து, அவர்கள் அத்திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு விரிவுரை செய்யும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும்.

ஆதலால், முறையில்

கோயில்களிற் பொதுப்பெண்டிரைத் தொண்டு செய்ய அமைத்தலும், அவர்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டுவதும் அடியோடு விலக்கப்படல் வேண்டும்.

கோயில்களில் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழியிற் பயிற்சி யுடையராயும், சைவசித்தாந்தம் நன்குணர்ந்த வராயும் தேவார திருவாசகம் ஓதுபவராயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல்வேண்டும். சிலகோயில்களிற் றவிரப் பெரும்பான்மை யான மற்றைக்கோயில்களில் வழிபாடுசெய்யும் குருக்கள் மார்க்குத் தக்கவரும்படியும் தக்கசம்பளமும் இல்லை. ஆதலால், மிகுந்தவரும்படி உள்ள கோயில்களின் வருவாயிலிருந்து மற்றைக்கோயில்களின் ஏழைக்குருக்களுக்குத் தக்கசம்பளங்கள் கொடுப்பித்தல் வேண்டும்.

கோயில்களிலுள்ள இறைவன் திருவுருவத்திற் எப்போதும் போலக் குருக்கள்மாரே வழிபாடு செய்யவேண்டுமல்லாமல் வணங்கப்போகிறவர்களெல்லாம் அதனருகிற் அதனைத்தொட்டுப் பூசித்தல் வேண்டுமென்பது நல்லமுறை

சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/292&oldid=1580253" இலிருந்து மீள்விக்கப்பட்டது