இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20
❖ 11❖ மறைமலையம் – 11
5
5
10
உ
திருச்சிற்றம்பலம்
திருவருளியல்பு கூறி நெஞ்சறிவுறுத்தல்
தன்றோ ணான்கி னொன்றுகைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு
மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே வளிகுலாம் வெளியிலெளிதெனக் கறங்கும் விளம்பழ நிகர்த்தவிவ் வளம்பொலி ஞாலத்து வேறு--வேறு குழீஇய வெறும்பினம் போல வரிதுமுயன் றூக்குந் தெரிவுறு மாந்தரில், விழியிதழ் முகிழ்ப்பிற் கழாய்பல வுருட்டுங் கைவல் லொருவன் போல மெய்பெற வெப்பெரும் புவனமு மெண்ணிலா வுயிரு மப்பெரும் பரிசா லமைந்தாங் கியங்கப் பேதுற லின்றி மாதுட னமர்ந்த
வண்ணலார் திருவரு ணண்ணுவழி யறிந்து
தருக்குற லின்றி யிருக்குநர் சிலரே.
எம்முடை யறிவாற் செம்மைபெரி துறுவே
மெம்முடை யறிவா னலம்பல பெறுவே
மெம்முடை யறிவினுஞ் சிறந்ததீண் டுண்டுகொ
15
லியாமே யெமக்கீங் குறுதுணை யென்னா
வெறும்பல மொழிந்து கழியுநர் பலரே