20
25
30
பாமணிக் கோவை ஃ
ஈங்ஙன மொழியாத விளையோ னொருவன் கருமாண் குஞ்சியன் றிருவிய னோக்கின னருமைசால் குணத்தின் னொருவழிப் புகழின்றி
யொருவா றிருந்து மருவுமோர் குடியி
லொருதனித் தோன்றிய மரபினன் றிருவரு
டுணைநின் றுய்க்கும் பெற்றி யல்லது
பிறிதுதுணை யில்லாச் செறிவுபெரி துடையோ, னகன்கண் ஞாலத் தியாருமி லொருசிறை
நினைந்தாங்குத் திரிதரூஉ மளவை, முனைந்தொரு
காண்டகு சிறப்பி னான்ற கேள்விப்
பல்புகழ் நிறுத்த வொடியாப் படிவத்துப் பெரியோ னொருவ னருள்வரத் தோன்றி யருணெறிச் செலவு தெருளுற வேண்டு
மழியா வுள்ளத்துக் கழிபே ரிளையோய்! இந்நெறிச் செலவு பிழையா தோம்பிற் பொன்னகர்ச் செல்வமும் பொருளன் றாக மன்னிய செல்வத்து வதிகுவை யெனாஅ நன்பல மொழிந்து போகப், பின்பல
35 நினையா தொருங்கிய வறிவின னாகி விழைதகக் கலித்த கொழும்புன் னிலத்து வாலுகம் பரந்த கோலமா நெறியிற் கதிர்தெறக் குழைந்து வியர்முக மரும்ப விடுகிய நோக்கமொடு கடிதுசெல லுற்றுப் படுகதி ரமையத்து நெடிதோங்கு பொழிலிற் களிதுளும் புள்ளமொடு தெளிவுபெரி தெய்தி யானா விருப்பொடு தான்சென்று புகுதலும், பொதியத் தென்ற றதையரும் பவிழ்த்துக் கையரிக் கொணர்ந்த பல்விரை தெளிப்பவு
40
45 மொருசா ரோடும் பொருபுனற் காலிற் சிறுவளி தாவலி னிழுமென வொலிப்பவும்
21