பாமணிக் கோவை
31
6
வந்தே மாதரம்
“கோயில் தொறும் கோயில் தொறும் அருட்கோலங் கொண்டிருக்கும் தாய்துர்க்கே தமியேம்நின் படிவமன்றே பரவுவதே;
பாய்படைகள் பதின்கரத்தும் பற்றுகின்ற தாய்துர்க்கே
சேயிதழ்த்தா மரைநிழல்வாழ் திருமகளும் நீயன்றே;
மேயகலை விழுப்பொருள்கள் விளக்குமின்னும் நீயானால் சேயேம்நின் திருவடிகள் வாழ்த்துவதும் சிறப்பாமே;
ல்
(1)
அன்னாய் வாழியரும் பொன்னாள் வாழி, ஒப்பில் மின்னாள் வாழி, கனி நீரும்வாழி, வந்தேமாதரம்; களங்கமிலா தினிதாகி வளம்பெறுநன் னகைதுலங்க விளங்குபசுங் கதிர்முகம்எங் களைகணாம் அன்னாய், நின் இளங்குமுத வாய்முகமெம் இன்னுணவாம் அன்னாய்
வந்தேமாதரம்”
(2)
1.
2.
அடிக்குறிப்புகள்
"அன்னையாகிய கொற்றவையை விளித்து வணக்கம் செலுத்தும் முறையில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.”
துர்க்கே - துர்க்கை யம்மையே; படிவம் - உருவம்; பாய் படைகள் - பாயும் கருவிகள்; பதின் கரத்தும் பத்துக் கைகளிலும், நிழல் - ஒளியில்;
மின்னும் - மின்போல் வாயும்.
பொன் நாள் - பொன் போன்ற வாழ்நாள்; மின்னாள் - மின்னலைப் போன்றாள்; கனிநீரும் - கனிச்சாறு ஒத்தாய்; வந்தே மாதரம் - வணக்கம் தாயே; களைகண் ஆம் என்க. இன் உணவாம் - இனிய துய்ப்பாகும்.