56
மறைமலையம் – 11
துன்பமறு பொருளுடையோ ரதுதொலையத்
துயரடைத லென்னே யென்னே
அன்புதரு கவலையுட னரிதுழைப்போ
ரஃதின்றி யார்த லென்னே.
நெடிதுயிர்க்கு முழுபகடு நிலனசைஇ
கு
வறிதிருப்ப நீள்வா னூடு
குடிகொளுயிர்க் குழாம்பரந்து கறங்குமொலி குலவுறுத லென்னே யென்னே
கடிமலரூற் றுறச்சுரக்குங் கழிசுவைத்தேன் பருகவெழு காதல் கூரத் துடிசிறையினிளஞிமிறு துளும்புபக லொளிப்புனலி னீந்து மன்றே.
அவைதம்மிற் சிலமொழிந்த வொளிப்புனலிற்
சிறிதுபடீஇ யசைந்து செல்ல உவைசில்ல பொலன்விளங்குஞ் சிறைப்படாஅ
முயரவிரித் தொளிஞா யிற்றி
நவையின்றி யவிரொளிமு னலமிளிரப்
பலகாட்டி நடப்ப வெல்லாம்
இவைதாமிம் மனிதருற வருவாழ்வென் றெழுநினைவின் விழிக்கு மன்றே.
இடங்குழுமி நகர்வனவு மெழுந்துயரப் பறப்பனவு முதலா வெல்லாந் தொடங்குழியே மறிதரவு முடிவுகொளுந் தொழிலரிதி னுஞற்று வோரு முடங்குகளி யுளம்விளைய நுகர்வோரும் ஊழ்வலியா கியபல் வண்ணப்
படங்குலவச் சிலவருநாட் பரப்பிடைபோழ்ந் தரிதெழுந்து பரிகு வாரால்.
இழவூழி னொருகருங்கை யிழைத்தகொடுங்
கொலையானோ விறுமாப் பெல்லாம்
(4)
(5)
(6)
(7)