அம்பிகாபதி அமராவதி
75
விட்டாற், கட்டழகும் மனநலகுணநலங்களும் ஒருங்கு நிறைந்த நங்காய்! நின் காதலைப் பெறுதற்குத் தக்கார் எவருளரோ தெரியவில்லையே!
காவேரி : அத்தகையவரைத் தெரிந்து கொள்ளாதது உங்கள் குற்றமே.
(இது சொல்லி முகங் கவிழ்கின்றாள்)
நயினார் : (சிறிது மனங்கலங்கி) அவரை யான் எங்ஙனந் தெரிந்து கொள்வேன்?
காவேரி : (முகங்கவிழ்ந்தபடியே புன்முறுவல் செய்து) இக்கேள்வியினை என்னைக் கேளாதீர்கள்; உங்கள் நெஞ்சை நோக்கிக் கேளுங்கள்!
நயினார் : (சிறிது நேரம் வாளா இருந்து) ஆம்! பெண் மணி! சென்ற பதி னைந்து நாட்களாக என் நெஞ்சக் கண்ணாடியில் மறக்கொணாப் பேரழகு வாய்ந்த ஓர் இளம் பெண்ணின் உருவம் இடைவிடாது தோன்றி என்னை வாட்டி வருத்திக் கொண்டேயிருக்கின்றது! என் செய்வேன்!
காவேரி : என்செய்யவேண்டும்? அப்பெண்ணின் ருவத்தை யொத்தவள் எவள் வெளியேயிருக்கின்றனளென்று தேடிக் கண்டுபிடியுங்களேன்.
நயினார் : அவனை யான் தேடிச் செல்லவேண்டுவதில்லை. மிக்க அண்மையிலே தான் இருக்கின்றனள். ஆனாலும், அவளது மனநிலையினைத் தெரியாமல் அவளை அணுக என் உள்ளம் நடுங்குகின்றது!
காவேரி : அப்படியானால் அவள் இருக்குமிடத்தை மன நிலையினைத் தெரிந்து
நருங்கி
அவளது
காள்ளுங்களேன், அவள் எங்கிருக்கின்றாள்?
நயினார் : இதோ, இங்கேதான் இருக்கின்றாள்.
(என்று காவேரியினையே சுட்டிக் காட்டுகின்றான்)