அம்பிகாபதி அமராவதி *
77
காவேரி : அண்ணா! ஆசிரியர் இந்த நிலைமையில் தனியே செல்லல் ஆகாது. யாராவது யாராவது அவருடன்
வீடு யாகச் செல்லல் வேண்டும்.
றேன்.
துணை
அம்பிகாபதி : யானே துணையாகப் போய் வருகின்
நயினார் : வேண்டாம் அம்பிகாபதி! நீயும் அரண் மனைக்குப் போய் வந்தமையாற் களைப்பாகவே காணப் படுகின்றாய்!
6
காவேரி : (நயினார்க்குக் கண்ணாற் குறி செய்து) அண்ணா! என் தோழி பச்சையே அவருடன் துணையாய்ப் போய் வரட்டுமே.
அம்பிகாபதி : அப்படியானால் அவள் நயினாருடன் போய்வர ஏற்பாடு செய்!
(காவேரி அப்பாற் போய்ச் சிறிதுநேரஞ் சென்று தோழியுடன் வந்து அவளைத் துணைவிடுக்க நயினார் அவளோடு வீடு செல்கின்றான்)
டு
நயினார் : (தன் வீட்டுள் நுழையுங்கால்) பச்சே! நீ என்னுடன் துணையாக வந்ததற்காக 6 உனக்கும் உன் தலைவிக்கும் என் நண்பனுக்கும் நன்றி செலுத்துகின்றேன். நீ செவ்வனே வீடு போய்ச்சேர்.
பச்சை : பெருமானே! இதை என் தலைவி உங்களிடஞ் சேர்ப்பிக்கச் சொன்னார்கள்!
(என்று ஓர் ஓலை நறுக்கை நீட்ட அவன் அதை மகிழ்வுடன் ஏற்க. அவள் அவனை வணங்கிப் போய்விடுகிறாள்)