இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அம்பிகாபதி அமராவதி
மற்றவர் அற்றைச் சிற்றுடல் நீப்பினுங் காதலிற் கழுமிய ஏதமில் லாவருயிர்
ஒளிவடி வாயும் ஒலியுரு வாயும் விளிவில வாகிக் களிகிள ருளமொடு நின்னரு ளின்பத்து மன்னிய நிகழ்ச்சியைப் புறத்திணைப் பொருளிற் பொருந்த வைத்து நாடகத் தமிழ்நூல் நன்கனம் வகுக்கஎன் நாவினும் உணர்வினும் நலக்க இயங்கி நன்றருள் புரித்திடல் வேண்டும் மன்றி லாடும் மதிமுடி யோயே!
9