இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124
―
மறைமலையம் 13
அவள் வாயிலிருந்து பிறந்த புதுமையான சொற்களாலும், விவரந் தெரியாமல் அவள் செல்லும் மிக்க விரைவினாலும் மனந் திகைத்துத் திகில் கொண்டார்களாயினும், சுந்தராம்பாள், ஞானாம்பாள் இருவரும் தம்மையறியாமலே அவள் செய்த படியே செய்து தாமும் பின்றொடர்ந்தார்கள்.
அந்த பார்த்துக்
முதியவியாபாரியோ--அவர்களைப்
பின்னே
காண்டு இமையாக்கண்களோடும் திறந்த வாயோடும் ஒன்றும் பேசாமல் வியப்புற்று நின்றான்; அவர்கள் தன்பார்வைக்கு எட்டாமல் மறைந்து போன பின்னுஞ் சில நிமிஷங்கள் அவன் அவ்வாறே நின்றான்.