இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்னிணைப்பு
281
விளங்குகிறான் அம்பிகாபதி. தன் முதல் மனைவி இறந்தபோது பிரிவுக் காற்றாமல் துன்புற்றானே ஒழியக் காதல் என்ற அகவுணர்வின் உயர் வடிவைக் கண்டவன் அல்லன்.
ஆயினும் அம்பிகாபதி, அமராவதியைக் கண்டு ‘மயக்கம்’ கொண்ட நாள் முதல் பூங்கா மண்டபத்தில் காதல் புதுவிருந்து உண்ணும் காதலனாகி, விடியும் வரை புதிய ரோமியோவாக மாறியது வியக்கத் தக்கது. அத்துடன் அம்பிகாபதியின் வளர்ச்சி, கொடுமுடியை எட்டி விட்டது எனலாம்.