இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26
66
மறைமலையம் -14
அவ்வாறு சொல்வதிற் குற்றம் ஒன்றும் இல்லை யானாலும், நம்முடைய சாதியார் மற்றவர்களில் நல்லவர்களைக் கண்டால் தலையெடுக்கவொட்டாமல் அவர்களை நசுக்கிவிடக் கங்கணங் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப் படுகிறேன்.” என்று விடைகூறினேன். இதற்குள் எங்கள் தாயார் படுக்கைக்குப் போகும்படி கத்தினமையால் நாளைக்கு இதைப் பற்றிப் பேசலாம் என்று போய்விட்டோம். மிச்சமும் பின்னால் எழுதுகிறேன்.