உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் 16

துக்கே முதன்மை கொடுத்தாரென்னும் எமதுரையை மறுக்கின் றனர். தொல்காப்பியம் இலக்கணநூலாதலின் அதன்கட் கூறிய முறை கொள்ளற்பால தன்றென்பதே இவரது கருத்தாகின்றது. இலக்கண நூலின் இலக்கணம் இன்னதென்று உணர்ந்தன ராயின் இவர் இங்ஙனங் கூறி இழுக்கார். இலக்கண நூ நூல்க ளெல்லாம் இலக்கிய நூல்களின் சொற்பொருளியல் புகழை நன்காய்ந்து, அவை தம்மையே முறைப்படுத்தி உரைக்கும் தன்மையவாமென்பது “இலக்கியங்கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்” என்னும் நன்னூற் சூத்திரத்தினை அறிந்த சிறும காரும் உணர்வர். இதுதானு முணராது இலக்கணமுறை இலக்கியமுறையின் வேறாவது எனக்கொண்ட அம்மறுப்புரை காரரின் தமிழறிவு சால அழகிது.

தொல்காப்பியனார்

இலக்கியப் பொருளியல்புகளை முறைப்படுத்திச் சொல்லி விளக்குவதே இலக்கண மென்பது தமிழ் நூல் வட நூல் இயற்றிய ஆசிரியரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின், தெய்வத் வகுத்துவிளக்கிய 'அகப்பொருள்', ‘புறப்பொருள்' இலக்கணங்கள் அத்தனையும், அவர்காலத்தும் அவர்க்கு முன்னிருந்த சான்றோர் காலத்தும் இயற்றப்பட்ட நூல்களின் பொருளமைதிகளேயாதல் தெற்றென விளங்கா நிற்கும்.

3. பண்டை இலக்கியங்களும் இன்பமும்

இனிப், பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் இயற்றிய இலக்கிய நூல்கள் தாமும், அஞ்ஞான்றை உலகியல் நிகழ்ச்சிகளை உள்ளவாறே எடுத்துக்கூறுந் தன்மையவன்றி, உலகிய லொழுக்கத்துக்கு மாறாவன சிறிதுங் கூறுவன அல்ல. இஞ்ஞான்று ஆரியர்தம் பொய்வழக்கின்பாற் பட்டு, உலகியல் வழக்கோடொவ்வாத பலவற்றைப் பொய்யாகப் புனைந்து கட்டிச் சொல்லுந் தமிழ்ப்புலவர் போலாது, பண்டிருந்த தமிழ் நல்லிசைப் புலவர்கள் பட்டது பட்டாங்குமொழியும் பொய்யா நாவினர் என்பது பேராசிரியர் 'தொல்காப்பிய மரபியலிற்’ கூறியவுரையானும், பண்டைத் தமிழிலக்கியங்களை ஒருசிறிது உற்றுநோக்கு முதலானும் இனிது உணரலாம். பண்டைக் காலத்துத் தமிழிலக்கியங்களிற் பெரும்பாலன இன்பத்தின் மேற்றான அகப் பொருளினையே மிகவிரித்து உரைத்தலும்,

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/151&oldid=1583688" இலிருந்து மீள்விக்கப்பட்டது