உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

139

யேயாயிற், பின்னர் அறத்தைப் பொருளின் பங்குகளுக்குக் காரணமென்றல் முன்னொடுபின் முரணுமன்றோ? மேலும், பழவினைக்கே முதன்மை சொல்லுவார் மீமாஞ்சகரேயன்றிச் சைவ சித்தாந்திகளல்லர். மக்கள் தமது நன்முயற்சியால் ஊழையும் புறங்காண்பர் என்பதே சைவ சித்தாந்திகள் கோட்பாடு; என்னை? மக்கள் தமக்கென ஓர் அறிவுஞ் செயலும் இலராயின், அவர் செய்யும் முயற்சியெல்லாம் ஊழ்வினை யொன்றினாலேயே யாவனவாயின் அவர் அறிவுஞ் செயலுமில்லாக் கல்லும் மண்ணும்போல், அறிவில் (அசேதனப்) பொருள்களாவராதலின் என்க. அதுவேயுமன்றி, ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அறத்துப்பாலின் ஈற்றில் ஊழ்வலியை மிகுத்துக் கூறினாராயினும், அவ்வூழின்வலி, மக்களின் விழுமிய அறிவு முயற்சியின் முன்னே நில்லாதொழியு மென்று தெருட்டிப், பின்னின்ற பொருட்பாலில்

“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்'

L

என்று முடித்துக் கூறுதலாற் பழவினைக்கு முதன்மை கூறுதல் நாயனார்க்கும் உடன்பா டல்லாமை நன்கு பெறுதுமன்றோ! மலத்தினால் மறைவுண்டு கிடந்த உயிர்கள் இறைவன் திருவருளால் மாயையிற் றிரட்டப்பட்ட உடம்பினைக் கருவியாகப் பெற்று, அம் மலமாக சிறிது நீங்கி அறிவும் முயற்சியும் உடையனவாய் முனைந்து நிற்கும் வழி, அவை இன்பத்தை அவாவியே நிற்கும் அல்லது அறத்தினை அவாவி நில்லா என்பதூஉம், முதன்முதற் பிறவிக்கு வரும் ஓரறிவுயிர்கட்குப் பழவினை சிறிது மின்மையின் அவற்றின் முயற்சிக்குப் பழவினை காரணமாகாது இன்பமே தலைக் காரணமாய் நிற்கு மென்பதூஉம், அதனாற் பழவினைக்கு முதன்மை கூறுதல் சைவசித்தாந்தத்துக்குச் சிறிதும் அடா தென்பதூஉம், யாண்டும் உயிர்கள் கீழ்க்கீழ்ப் பிறவிகளிற் செய்த முயற்சிகளின் பழக்கந்துணையாக மேன்மேற்பிறவிகளில் மேலுமேலும்

மேலும் அறிவுமுயற்சி யுடையனவாய்ச் செல்லுதலின் இன்பத்தா லுந்தப்பட்ட அறிவுமுயற்சியே பிறவியி னேற்றத் திற்குக் காரணமாமென்பதூஉம், இதுவே சைவசித்தாந்தத்துக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/164&oldid=1583749" இலிருந்து மீள்விக்கப்பட்டது