உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் 16

தஞ்சேர்க்கை கீழ்ப்படிக்கண் நிறுத்தப்பட்டது.

இனித், தாசமார்க்கத்திற்கு மேலான இரண்டாம்படியில் நிற்பது சற்புத்திரமார்க்கம் ஆகும். இஃது ஒருதலைவற்கும் அவன்றன் புதல்வற்கும் இடைநிகழும். அன்பினை உணர்த்து வது. தன் தலைவன்பால் அடியவனுக்கில்லாத உரிமை அவன்றன் புதல்வற்கு உளதாவதால், முன்னை நிலையினும் இந்நிலையில் நிற்பார்க்கு நெருங்கிய தொடர்பும் அது பற்றிவரும் உரிமையும் அவ்வுரிமையால் நிகழும் மிக்க அன்பும் உண்டாதலைக் காண்கின்றோம். என்றாலுந், தன் தந்தையொடு கூடிநுகரும் இன்பம் புதல்வற் கிண்மையின் இஃது இரண்டாம் படிக்கண்ணே வைக்கப் பட்டது. என்றாலும், புதல்வனால் தந்தைக்கு இன்பமுந், தந்தையின் உதவியாற் புதல்வர்க் கின்பமும் நிகழக் காண்டலின் இவரது சேர்க்கையும் இன்ப மென்னும் பொன் நாணினாலேயே பிணைக்கப்பட்டு விளங்குகின்றன தென ஓர்மின்!

இனி, இதற்குமேல் மூன்றாம் படிக்கண் நிற்பது சகமார்க்கம் என்று நுவலப்படும். ஒரு தலைவன்பால் அவனடியவனுக்கு அன்புடனே கூட மிக்க அச்சமும் நிகழும்; புதல்வற்கோ தன் தந்தையினிடத்து மிக்க அன்பு உண்டாயினுந், தந்தையின் ஒழுகலாறுகள் எல்லாவற்றுள்ளுந் தலையிடுதற்கு ரிமையில்லானாய் அச்சத்தால் அவனைச் சிறிது அகன் றெழுகுங் கடமைப்பாடேயுடையன். மற்று, நெருங்கிய கெழுதகைமை வாய்ந்த தோழர் இருவர்க்குள் நிகழும் பேரன்போ அச்சம் சிறிதுமே கலக்கப்பெறாத விழுப்பம் வாய்ந்தது; ஒருவருள்ள நிகழ்ச்சிகளெல்லாம் ஒருவரறிந்து நலந்தீங் கிரண்டிலும் நழுவாத கேண்மையுடையராய் நிற்கச் செய்வது கீழ்ச்சென்ற ஏனை இரு படிகளில் நிற்பாரினும் நெஞ்சம் ஒத்த நேயர்மாட்டு நிகழும் அன்பும் இன்பமுஞ் சாலப்பெரிவாகலின், இவரது சேர்க்கை ஏனையிருவரது சேர்க்கையினுஞ் சிறந்ததாக மூன்றாம் படிக்கண்ணே இருத்தப் பட்டது. நெஞ்சு ஒன்றாகாவழித் துன்பமும், அவை ஒன்றாய வழிக் கழிபேரின்பமும் விளைதலால், தோழர் தம் சேர்க் கையும் இன்பத்தையே நிலைக்களனாய்க் கொண்டு நிற்றல் எளிதிற் புலனாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/167&oldid=1583764" இலிருந்து மீள்விக்கப்பட்டது