உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

145

தற்கு உரிமை யுடைத்தென்பது மேலே நக்கீரனார் கூறிய வுரையாற் றுணியக்கிடத்தலின், அன்பினைந்திணை யொழுக் கத்தைக் கூறும் தமது மேற்கோளுக்கு இசைய ஆசிரியர் அச் சொல்லைக் காதலின்பத்தின்பாற் படுத்துச் சூத்திரஞ் செய்தருளினார். ஒரு நூலுள் வரும் ஒரு சொல்லுக்குப் பொருடுணியும் வழி, அந் நூல்யாத்த ஆசிரியன் கருத்தறிந்து அதற்குப் பொருள்கொள்ளல் வேண்டுமேயல்லாது, தமக்குத் தோன்றிய வாறெல்லாம் அதற்குப் பொருளுரைப்பது சிறிதும் முறையாகாதென்க.

னி, ஆசிரியர் திருவள்ளுவனாரோ காமம் என்னுஞ் சால்லுக்கு உயர்பொருள் இழிபொருள் இரண்டுங் கொண்டிருக்க, அதனை ஆராய்ந்து பாராத அம் மறுப்புரை காரர் அச் சொல்லுக்கு அவர் உயர்பொருளே கொண்டா ரெனப் பிழைபடக் கூறினார். திருவள்ளுவனார் ‘காமத்துப் பாலில்' மட்டும் அதற்குயர்வுபொருள் கொண்டு, துறவற வியல் ‘மெய்யுணர்தல்' அதிகாரத்திற்,

“காமம் வெகுளி மயக்கம் இவைமூன் றன் நாமங் கெடக்கெடு நோய்”

என அதற்கு இழிவுபொருள் கொண்டார். ஆகவே, யாம் மெய்யன்பின்வழி நிகழும் உயர்ந்த காமவின்பத்தைக் ‘காதல்’ என்றதும், அம் மெய்யின்பின் வழி நிகழாது வெற்றுடம்பின் சேர்க்கையளவாய் நிகழ்வதனை ‘இழிந்த காமம்' என்றதுந் தொல்லாசிரியர் வழக்கோடு ஒருங்கொத்த முடிபாகலின், இஃதுணராது காமம்' என்னுஞ்சொல் உயர்ந்தவின்பத் னையே யுணர்த்துமென்ற அம் மறுப்புரைகாரர் கூற்று உள்ளீடில்லா வெறும் பதடியாய் ஒழிந்ததென்றறிந்து கொள்க.

12. தொல்காப்பியத்திற் சாதி இல்லை

இனித், தொல்காப்பியத்தில் தொழில் வேற்றுமையே சொல்லப்பட்டதன்றிச், சாதி வேற்றுமை சொல்லப்பட வில்லை யென்ற எமது மேற்கோளை, அம் மறுப்புரைகாரர் மறுத்த பகுதி சிறிது ஆராயற்பாற்று.

மக்கள் வாழ்க்கையானது, அவர் தம்முள் ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/170&oldid=1583778" இலிருந்து மீள்விக்கப்பட்டது